2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அதிவேக பாதைகளில் கட்டணம் வசூலிக்கும் முறையை LANKAQR ஊடாக டிஜிட்டல் மயமாக்குதல் - இலங்கையில் பௌதீக நிதிப் பாவனையை குறைக்கும் நோக்குடன் LANKAQR கொடுப்பனவு முறையினைப் பிரபல்யப்படுத்துவதற்கு உரிமப்பத்திரம் பெற்ற நிதி நிறுவனங்கள் அனைத்துடனும் இணைந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முகாமிக்கப்படும் அதிவேக பாதைகளில் கைகளால் கட்டணம் வசூலிக்கப்பட்டுவரும் வாயிலில் LANKAQR முறைமையை அறிமுகப்படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. தமது செல்லிட தொலைபேசியில் உரியத் தொகையினைக் குறிப்பிட்டு எந்தவொரு வங்கியிலும் LANKAQR செயற்பாட்டு நடமாடும் கொடுப்பனவு செயலியின் ஊடாக கட்டணம் வசூலிக்கும் வாயிலிலுள்ள QR குறியீட்டினை ஸ்கேன் செய்வதன் மூலம் 8-10 செக்கன்களில் உரிய கொடுப்பனவினை மேற்கொள்வதற்கு அதிவேக பாதையினை பயன்படுத்தும் சாரதிகளுக்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கிணங்க, குறித்த கொடுப்பனவு முறையினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |