2021-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிரத்தியேக தரவு பாதுகாப்பு சட்டமூலம் - அரசாங்க நிறுவனங்கள், வங்கிகள், தொலைபேசி வசதிகளை வழங்குவோர் மற்றும் வைத்தியசாலைகள் போன்றவை பிரத்தியேக தரவுகளை சேகரித்து அவற்றை பயன்படுத்துவதற்காக எடுக்கும் போது குறித்த தரவுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் அதேபோன்று இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தினை விருத்தி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டும் பிரத்தியேக தரவு பாதுகாப்பு சட்டமூலமானது வரையப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |