• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின்சக்தி துறை தொடர்பிலான பொது கொள்கை வழிக்காட்டுதல்கள்
- 2030 ஆம் ஆண்டளவில் மின்சார உற்பத்தியின் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க தோற்றுவாய்களிலிருந்து பெற்றுக் கொள்தல், எதிர்காலத்தில் புதிய நிலக்கரி மின் நிலையங்களை தாபிக்காமலிருத்தல், 2050 ஆம் ஆண்டளவில் வலுசக்தி பிறப்பாக்கலின் போது நிகழும் தேறிய காபன் வௌியேற்றலை பூச்சிய நிலைக்கு கொண்டுவருதல் ஆகிய பிரதான கொள்கை குறியிலக்குகள் சார்பில் 2021 செப்ரெம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோன்று அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக மின்சக்தி துறை தொடர்பிலான பொது கொள்கை வழிக்காட்டுதல்களை வௌியிடுவதற்கும் இந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக 2022 - 2041 காலப்பகுதிக்குரிய ஆகக்குறைந்த செலவு நீண்டகால பிறப்பாக்கல் திட்டம் இலங்கை மின்சார சபையினால் தயாரிப்பதற்கும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 5 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள மின்சக்தி துறை தொடர்பிலான பொது கொள்கை வழிக்காட்டுதல்கள் சார்பிலும் இந்த வழிகாட்டுதல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதன் சார்பிலும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.