2021-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2022‑01‑01 ஆம் திகதியிலிருந்து 2022‑08‑31 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் டீசல் இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை வழங்குதல் - 2022‑01‑01 ஆம் திகதியிலிருந்து 2022‑08‑31 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்கு 1,137,500 +10/-5% (0.05 உச்ச சல்பர் நூற்றுவீதம்) மற்றும் 262,500 +10/-5% பெரல் டீசல் (0.001 உச்ச சல்பர் நூற்றுவீதம்) இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தம் சார்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட வழங்குநர்களிடமிருந்து கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை சிங்கப்பூர் M/s. Vitol Asia Pte. Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |