• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
SPMC Lotus ஔடத கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- ஹொரண, மில்லாவ பிரதேசத்தில் ஔடத வலயமொன்றைத் தாபிப்பதற்காக 2021 மார்ச் மாதம் 08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம வழங்கப்பட்டதோடு, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 65 ஏக்கர் காணித் துண்டொன்றை குறித்தொதுக்குவதற்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளை கையாள்வதற்காக செயற்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் 2021 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம வழங்கப்பட்டது. இதற்கிணங்க, இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உத்தேச ஔடத வலயத்தின் பெயரை SPMC Lotus ஔடத கருத்திட்டம் என பெயரிடுவதற்கும் சர்வதேச போட்டிக் கேள்வி முறையினைப் பின்பற்றி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான மதியுரை நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்கும் ஆர்வ வௌிப்படுத்தல்களை கோரி எழும்பு முறிவு, நரம்பு அறுவைசிகிச்சை உபகரணங்கள், புற்றுநோய் மருந்துகள் மற்றும் வாய் மூலம் வழங்கும் சாதாரண மருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்காக மூன்று (03) கைத்தொழிற்சாலைகளை துரிதமாக தாபிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.