2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆபாச வௌியீடுகளை தடை செய்வதற்கு ஒருங்கிணைவாக தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துதல் - ஆபாச வௌியீடுகளை தடை செய்யும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு 2021 ஒக்றோபர் மாதம் 05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, குறித்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஒருங்கிணைவாக தண்டனைச் சட்டக்கோவையின் 285, 286 மற்றும் 289அ ஆகிய பிரிவுகளை இல்லாதொழிப்பதற்கு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |