2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2021 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவக்காற்று காலப் பகுதியின்போது வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் சரக்குக் கப்பல்களை ஈடுபடுத்தல் - வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான Mv.Ceylon Breeze மற்றும் Mv. Ceylon Princess ஆகிய இரண்டு (02) கப்பல்களையும் 2021 / 2022 தென்மேற்கு பருவக்காற்று காலப் பகுதியில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக பொருத்தமான கப்பல்களை வாடகைக்கு எடுப்பவர்களை தெரிவு செய்யும் பொருட்டு சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியில் 'கப்பல்களை வாடகைக்கு எடுப்பவர்கள்' மற்றும் 'வர்த்தக முகாமைத்துவ கம்பனிகள்' என்பவற்றிடமிருந்து ஆர்வ வௌிப்படுத்தல்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கேள்வியின் பொருட்டு 04 நிறுவனங்களினால் ஆர்வ வௌிப்படுத்தல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட பெறுகைக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு Mv.Ceylon Breeze மற்றும் Mv. Ceylon Princess ஆகிய இரண்டு (02) கப்பல்களினதும் வர்த்தக முகாமைத்துவ ஒப்பந்தத்தை M/s Wallem Shipping (Singapore) Pvt. Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |