• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபைக்குரிய மஹர கல்குழி காணியில் கலப்பு அபிவிருத்தி செயல்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கை துறைமுக அதிகாரசபையின் தேசிய துறைமுக பிரதான திட்டத்தின் மூலம் கொழும்பு துறைமுகத்தின் சேவை வழங்கல் மற்றும் அது தொடர்பிலான பணிகளை அபிவிருத்தி செய்யும் அவசரத் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, புளுமெண்டல் பிரதேசத்தில் துறைமுகம் சம்பந்தப்பட்ட சேவை வழங்கள் பிரிவொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தற்போது புளுமெண்டல் பிரதேசத்திலுள்ள இலங்கை துறைமுக அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இலக்கங்களை பொருத்தமான காணியொன்றில் தாபிக்கவேண்டியுள்ளது. ராகம, மஹர பிரதேசத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமாகவுள்ள 8 ஹெட்டயார் விஸ்தீரணமுடைய காணியில் ஒரு பகுதி கொழும்பு துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட காலப்பகுதியில் கருங்கல் பெற்றுக் கொள்ளப்பட்ட வேலைத்தளமாக நடாத்திச் செல்லப்பட்டுள்ளதோடு தற்போது இந்தக் காணி எவ்வித பயனுள்ள நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படவில்லை. அதேபோன்று இந்த காணி தற்போது மழைநீரினால் நிரம்பியுள்ளதன் காரணமாக அதனை நீர்சார்ந்த நகர அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான தென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த காணித் துண்டை கலப்பு அபிவிருத்தி செயல்திட்டமொன்றாக வதிவிட, நகர, கலாசார , நிறுவன மற்றும் களியாட்ட வசதிகளுடன் கூடியதாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டத்தை அரசாங்க - தனியார் பங்குடமை கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.