• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹமோதரை மகப்பேற்று வைத்தியசாலையை மீண்டும் நிர்மாணித்தல்
- மஹமோதரை மகப்பேற்று வைத்தியசாலை கருத்திட்டத்திற்கு நிதியிடுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் ஜேர்மன் KfW வங்கிக்குமிடையில் 28 மில்லியன் யூரோ கடன் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு, அதன் பின்னர் இந்த கருத்திட்டத்திற்காக மேலும் 13 மில்லியன் யூரோக்களைக் கொண்ட குறைநிரப்பு கடன்தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த வங்கியுடன் மேலதிக கடன் உடன்படிக்கையொன்றும் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் பணிகளை துரிதமாக பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் பின்னர் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள 13 மில்லியன் யூரோக்களைக் கொண்ட குறைநிரப்பு கடன்தொகையினை நன்கொடையொன்றாக மாற்றுவதற்கு ஜேர்மன் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, நன்கொடை உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கு நிதி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்கு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.