• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவைக்கான (அத்தியாயம் 101) திருத்தம்
- அழைப்பாணைகளை பிறப்பித்தல் மற்றும் கையளித்தல் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளை திருத்தும் தேவை நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குடியியல் நடவடிக்கைமுறை சீர்திருத்தம் தொடர்பிலான குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதோடு, வழக்கொன்றின் தரப்பினர்களுக்கு அழைப்பாணைகளை அனுப்பும் போது மின்னஞ்சல் மற்றும் செல்லிடத் தொலைபேசி தகவல் போன்ற தற்காலத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் தொடர்பாடல் முறைகளை பயன்படுத்தும் தேவையின்பால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையை (அத்தியாயம் 101) திருத்தும் பொருட்ட திருத்த சட்டமூலமொன்றை வரைவதற்காக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.