2021-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தனியார்துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான ஆகக்குறைந்த வயதினைக் குறிப்பிட்டு சட்டமாக்குதல் - தனியார்துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்காக நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த வயதெல்லையைத் திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைவு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள புடவை கைத்தொழில் மற்றும் வர்த்தக துறையில் தாக்கத்தினை செலுத்தும் கொள்கை மற்றும் சட்ட விடயங்கள் பற்றி ஆராயும் குழுவின் உரிய சகல தரப்பினர்களினதும் பங்குபற்றுதலுடன் மேலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த குழுவில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின பிரகாரம் உத்தேச சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியன்றில் 52 வயதினையடையாத ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதினை 60 ஆக நீடிப்பதற்கும் சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியன்றில் 52 வயது அல்லது அதற்கு மேலான ஊழியர்களின் வயதுக்கு அமைவாக 3 வகுதிகளின் கீழ் ஆகக்கூடுதலாக 59 வயது வரை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள தனியார்துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான ஆகக்குறைந்த வயது சட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |