2021-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆபாச வௌியீடுகளை தடை செய்யும் சட்டமூலம் - தகவல் தொழிநுட்பம் மற்றும் பிற ஊடகங்களின் மூலம் வௌியிடப்படும் ஆபாச வௌியீடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2020 செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |