2021-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்திய குடியரசின் உதவியின் கீழ் காலி மாவட்டத்தின் 200 பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் மற்றும் நவீன கணனி ஆய்வுகூடங்களை நிர்மாணித்தல் - நாளுக்கு நாள் வியாபித்து செல்லும் டிஜிட்டல் தொழிநுட்பத்தின் இடைவௌியினை குறைத்தல் மற்றும் நவீன தொழிநுட்ப ரீதியில் தரமிக்க கல்வி வாய்ப்பிற்கு பிள்ளைகளுக்கு நியாயமான அணுகுமுறைகளை பெற்றுக் கொடுக்கும் காலத்தின் தேவையினை இனங்கண்டு, "உயர் தாக்கத்துடனான சமூக கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்" சம்பந்தமாக கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் வழிக்காட்டல்கள் பிரகாரம் காலி மாவட்டத்தின் 200 பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் மற்றும் நவீன கணனி ஆய்வுகூடங்களை நிர்மாணிக்கும் பொருட்டு 300 மில்லியன் ரூபாவினைக் கொண்ட நிதி உதவியினை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, நிதி உதவியினைப் பெற்றுக் கொள்வதற்காக இந்திய குடியரசுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |