2021-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு தாமரைகோபுர கருத்திட்ட கட்டடத் தொகுதி சார்பில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவுக்கு காணி சுவீகரித்தல் - தாமரைகோபுர கருத்திட்டத்தின் நிர்மாணிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவுபெற்று வருகின்றதோடு, அதன் வர்த்தக மற்றும் செயற்பாட்டு பணிகளை திட்டமிடுவதற்கு இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. உள்நாட்டு, வௌிநாட்டு பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் குறித்த கோபுரத்திற்கு அண்மையில் பேரே ஏரி சார்ந்து நவீன நீர் கண்காட்சி பூங்காவொன்றை நிர்மாணித்தல், உணவு விற்பனை நிலையங்களைத் தாபித்தல், இந்த கோபுரத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பணியாட் தொகுதியினருக்கான அலுவலகம், தங்குமிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அதற்கு அருகாமையில் நிர்மாணித்தல், தற்போது திட்டமிடப்பட்டுள்ள வாகன தரிப்பிடத்தை மேலும் விரிவுபடுத்துதல் போன்ற அபிவிருத்தி பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த அபிவிருத்தி பணிகளை நடைமுறைப்படுத்துவதற்காக கருத்திட்ட மனையிடத்திற்கு அண்மையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான ஏக்கர் 04 றூட் 03 பேர்ச்சஸ் 24.47 விஸ்தீரணமுடைய காணியை இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவுக்கு கையளிக்கும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |