2021-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
'கிராமத்திற்கு தொடர்பாடல்' தேசிய கருத்திட்டம் - இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவினால் 2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட 'கிராமத்திற்கு தொடர்பாடல்' என்னும் கருத்திட்டத்தின் மூலம் அதிவேக இணைய இணைப்புகளின் குறைபாடுகள் தொடர்பிலான கணக்கெடுப்பொன்று 25 மாவட்டங்களில் 14,000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தழுவி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பெறுபேற்றின் அடிப்படையில, இந்த ஆணைக்குழுவினால் தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்குநர்களுடன் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்தில் அதிவேக இணைய இணைப்புகளை வழங்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டமானது 2021 ஒக்றோபர் மாதத்தில் நிறைவுபெறவுள்ளது. டிஜிட்டல்மயமாக்கலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்து அதிவேக இணைய சேவைகள் மூலம் மொத்த நாட்டையும் தழுவக்கூடிய விதத்தில் குறித்த கருத்திட்டத்தை தேசிய கருத்திட்டமொன்றாக விரிவுபடுத்துவதற்கு அரசாங்கத்தினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிதி தொலைத்தொடர்புகள் அபிவிருத்தி நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |