• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான (101 ஆம் அத்தியாயம்) திருத்தம்
- வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல், நடுத்தீர்ப்பின் போது எடுக்கப்படும் காலத்தை குறைத்தல் என்பன பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்த) சட்டத்தில் "முன் வழக்கு விசாரணை செயல்முறை" தொடர்பில் புதிய ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும் குறித்த திருத்தங்களின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களாவன நிறைவேறவில்லை. ஆதலால், குறித்த பணிகளை முறையாக நிறைவேற்றுவதற்கு இயலுமாகும் வகையில் "முன் வழக்கு விசாரணை செயல்முறை" தொடர்பில் மேலும் திருத்தங்களை அறிமுகப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க "முன் வழக்கு விசாரணை மற்றும் சிறு உரித்து கோரிக்கைகள் நீதிமன்றங்களைத் தாபிப்பதற்கு ஏற்புடையதான விடயங்களை ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையை திருத்துவதற்கும் இதன் பொருட்டு சட்டவரைநரின் ஊடாக சட்டமூலமொன்றை வரைந்து கொள்வதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.