2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறை - தற்போது உள்நாட்டு சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறை சம்பந்தமாக அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய நிலைமையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தட்டுபாடின்றி போதுமானளவு அரிசி தொகையினை நுகர்வோருக்கு வழங்குவதற்கும் பாதுகாப்பான அரிசி கையிருப்பினை அரசாங்கத்தின் காப்பில் பேணுவதற்கும் இயலுமாகும் வகையில் உடனடியாக 100,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. அதேபோன்று தற்போது அரிசிக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச விலையினை உடனடியாக செயல்வலுவுக்கு வரத்தக்கதாக இரத்துச் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. |