2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் மனையிடமொன்றின் உடைமையை மீளப் பெற்றுக் கொள்ளல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் - மனையிடமொன்றை வாடகை அடிப்படையில் வழங்குதல், வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மனையிடத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கம் போன்ற விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் மனையிடமொன்றின் உடைமையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக புதிய சட்டங்களை விதிக்கும் பொருட்டிலான ஆரம்ப வரைவொன்று நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட வீட்டு வாடகை பற்றிய சட்ட ஆலோசனை குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. உத்தேச புதிய சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் முறையான நடைமுறையின் கீழ் நியாயமான வாடகை மற்றும் வௌியேற்றல் வழக்கு நடவடிக்கைகளின் போது உருவாகும் சட்ட ரீதியிலான தாமதங்களை தவிர்த்து குறுகிய காலத்தில் குத்தகை வழங்குநருக்கு சலுகை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கிணங்க இந்த நோக்கம் கருதி சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |