2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வெஹெரகொடவத்த என்னும் காணியை ஶ்ரீ ஜினரதன கல்வி நிறுவனத்திற்கு கமத்தொழில்சார் தொழிற்பயிற்சி நடவடிக்கைகளுக்காக குத்தகை அடிப்படையில் வழங்குதல் - அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வெஹெரகொடவத்த என்னும் ஏக்கர் 131 றூட் 2 பேர்ச்சர்ஸ் 29 விஸ்தீரணமுடைய காணியானது காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உடமையாக்கப்பட்டுள்ளது. உரிய பராமரிப்பின்றி பயன்குறைந்த தென்னை செய்கையுடன்கூடிய இந்தக் காணியை கமத்தொழில்சார் தொழிற்பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு பெற்றுத்தருமாறு ஶ்ரீ ஜினரதன கல்வி நிறுவனத்தின் நிர்வாக சபையினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்தக் காணியை 30 வருட காலத்திற்கு ஶ்ரீ ஜினரதன கல்வி நிறுவனத்தின் நிர்வாக சபைக்கு குத்தகை அடிப்டையில் வழங்கும் பொருட்டு காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |