2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சந்தஹிருசாய தூபியின் பராமரிப்பு மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக நம்பிக்கை பொறுப்பு சபையொன்றைத் தாபித்தல் - முப்பது வருட காலத்திற்கு மேலாக நிலவிய பயங்கர வாதத்தை முடிவுக்கு கொண்டுவரும்போது உயிர் நீத்த இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் ஞாபகார்த்தமாகவும் அவர்களுக்கு மோட்சம் கிடைப் பதற்காகவும் 282 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட சந்தஹிருசாய தூபியானது பாதுகாப்பு அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் அநுராதபுரம் புண்ணிய பூமியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இந்த தூபியின் நிர்மாணிப்பு பணிகள் முடிவடைந்ததன் பின்னர் அதன் பராமரிப்பு மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக நம்பிக்கை பொறுப்பு சபையொன்றை நியமிப்பதற்கும் இந்த தூபிக்காக உள்நாட்டு வௌிநாட்டு பக்தர்களினால் வழங்கப்படும் நன்கொடைகளை சேகரித்து, பேணுவதன் பொருட்டு நம்பிக்கை பொறுப்பு நிதியமொன்றை தாபிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |