2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இராஜதந்திர மற்றும் விசேட அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங் கத்திற்கும் பஹரேன் இராச்சியத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை - இராஜதந்திர மற்றும் விசேட அத்துடன் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கும் பஹரேன் இராச்சியத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு 2019 மே மாதம் 07 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட கூட்டத்தில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆயினும், உரிய காலப்பகுதிக்குள் அதற்குரிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முடியாமற் போயுள்ளது. ஆதலால், இரு நாடுகளுக்கும் இடையில் குறித்த உடன்படிக்கையினைச் செய்து கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |