• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு - 15, அளுத்மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டொன்றை வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு கையளித்தல்
- வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனமானது 1979 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்க மதிப்பீட்டு பெறுமதியினை துறைமுக ஆணைக் குழுவுக்குச் செலுத்தி கொழும்பு - 15, அளுத்மாவத்தை, 18 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டொன்றைப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் காணியில் 1982 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் செலவில் ஐந்து (05) தொடர் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இவற்றுள் மூன்று வீடுகள் இலங்கை துறைமுக அதிகாரசபையினாலும் மீதி இரண்டு தொடர் வீடுகள் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தினாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனமானது குறித்த காணித் துண்டிற்கான அரசாங்க மதிப்பீட்டு பெறுமதியினை செலுத்தியிருந்த போதிலும் அதன் உரிமை இதுவரை சட்டபூர்வமாக கையளிக்கப்படவில்லை. இதற்கிணங்க, 29.53 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய உரிய காணித் துண்டை வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.