2021-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காலி துறைமுக அபிவிருத்தி கருத்திட்டம் - வலய வர்த்தக துறைமுகமொன்றாக நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் "சுற்றுலா முடிவிடம், பாதுகாப்பான கப்பல் தளம்" என்னும் தொனிப்பொருளின் கீழ் காலி துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அரசாங்க - தனியார் பங்குடமையின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் கருத்திட்டமொன்றாக பாரம்பரிய துறைமுக சேவைகளை மட்டுப்படுத்தாது தனியார் துறையின் முதலீடுகளை கவர்ந்து காலி துறைமுக அபிவிருத்தி கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பிரேரிக்கப்பட்டுள்ளவாறு இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |