2021-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
எதிர்வரும் பணப் பரிமாற்றல் ஒப்பந்தங்களின் மூலம் சந்தையில் போட்டித் தன்மையை உருவாக்கி அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை நிலைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் - எதிர்வரும் பணப் பரிமாற்றல் ஒப்பந்தங்களின்மீது நிலையான விலைகளின் கீழ் லங்கா சதொச நிறுவனத்திற்கு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 2021‑04‑27 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மூன்று மாத காலத்திற்கு எதிர்வரும் பணப் பரிமாற்றல் ஒப்பந்தங்களின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட வழங்குநர்களுடன் உடன்பாடு செய்து கொள்ளப் படும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு பிரசித்த அறிவித்தல் மூலம் வழங்குநர்களிடமிருந்து ஆர்வ வௌிப்படுத்தல்கள் கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, கிடைக்கப் பெற்றுள்ள ஆர்வ வௌிப்படுத்தல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வழங்குநர்களுடன் உரிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்தும் பொருட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. |