• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜயவர்தனபுர, மாதிவெல "கொழும்பு பறவைகள் பூங்கா" கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
- ஶ்ரீ ஜயவர்தனபுர, மாதிவெலயில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான ஏக்கர் 37 றூட் 01 பேர்ச்சர்ஸ் 20.44 விஸ்தீரணம் கொண்ட காணித்துண்டில் வடிவமைத்து, நிதியிட்டு, நிர்மாணித்து, செயற்படுத்தும் அடிப்டையில் பறவைகள் பூங்கா கருத்திட்டமொன்றையும் அது சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை நடைமுறைப் படுத்துவதற்காக போட்டி கேள்வி வழிமுறையின் கீழ் பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் இணக்கப்பேச்சுக் குழுவினால் Colobmo Bird Park (Pvt.) Ltd. கம்பனி முன்வைத்த பிரேரிப்பினை சிபாரிசு செய்துள்ளது. இந்த சிபாரிசுக்குநகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ சபையின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கிணங்க, உரிய காணித் துண்டை 30 வருட காலத்திற்கு Colobmo Bird Park (Pvt.) Ltd. கம்பனிக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.