2021-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிழக்கு தீமோர் அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவுகளை தாபித்தல் - கிழக்கு தீமோர் அரசாங்கம் இலங்கையுடன் இராஜதந்திர உறவுகளை முறையாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கான அபிப்பிராயத்தை வௌிப்படுத்தி யுள்ளது. இந்தியா, சீனா, யப்பான், தென்கொரியா அடங்கலாக ஆசிய நாடுகள் பல ஏற்கனவே இந்த நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. கிழக்கு தீமோருடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் அதேபோன்று சர்வதேச மேடைகளில் இலங்கையின் தலையீட்டின் போதும் இலங்கைக்கு இந்த நாட்டின் ஒத்தாசையினை பெற்றுக் கொள்வது முக்கியமானதாகும். இதற்கிணங்க, இந்த நாட்டுடன் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு வெளிநாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |