• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைக்கான (அத்தியாயம் 101) திருத்தம்
- மரணசாசனம் அல்லாத சான்றுப்படுத்தப்பட்ட யாதாயினுமொரு உறுதி அல்லது ஆவணம் முதற்தோற்றளவில் அது முறையாக சான்றுப்படுத்தப்பட்டுள்ளதென தெரியவருமாயின் அத்துடன் கோரிக்கை முன்வைக்கும் போது அல்லது தொடரந்தும் கோரிக்கை முன்வைக்கும் போது கையொப்பமிடுதல் அல்லது அதன் போலியானதல்லாத தன்மை முக்கியமாக குற்றச்சாட்டொன்றாக எழுப்பப்படாதவிடத்து நீதிமன்றத்திற்கு இத்தகைய சாட்சிகள் தேவைப்பட்டாலொழிய எழுதி கையொப் பமிடுதல் மற்றும் அவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு முறையான சான்றுகளை சமர்ப்பிப்பது தேவையற்றதென்னும் ஏற்பாடுகளை குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைக்கு (அத்தியாயம் 101) அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்துவதற்காக நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த நோக்கத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைக்குத் தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும் அதன் பொருட்டு சட்டவரைநரினால் சட்டமூலமொன்றை தயாரிப்பதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.