• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மேம்பாட்டுக்கான கொள்கை இலக்கினை பிரகடனப்படுத்தல்
- 'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சார தேவையினை ஆகக்கூடுதலாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாய்களிலிருந்து பெற்றுக் கொள்வதனை இலக்காக கொண்டுள்ளதோடு, இதற்கிணங்க நாட்டின் மொத்த மின்சார தேவையின் 70 சதவீதம் 2030 ஆண்டளவில் துப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாய்களிலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் 2050 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சார உற்பத்தியை முழுமையாக காபனற்ற நிலைக்கு கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்கும் அரசாங்கத்தினால் கொள்கைத் தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை கட்டமைப்பிற்குள் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்திற்கும் இந்த சட்டத்திற்கான திருத்தங்களுக்கும் அமைவாக இலங்கை மின்சார சபையினால் 'ஆகக்குறைந்த செலவு நீண்டகால உற்பத்தி திட்டம்' தயாரிக்கப்பட வேண்டும். இந்த உற்பத்தி திட்டத்தை தயாரிப்பதற்கு குறித்த சட்டத்தின் (5) ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் மின்சக்தி அமைச்சரினால் பொது கொள்கை வழிகாட்டலை இலங்கை மின்சார சபைக்கு வழங்க வேண்டியுள்ளது. அதற்கிணங்க மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.