• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிநுட்ப பூங்காக்களைத் தாபித்தல்
- காலி, குருநாகல், அநுராதபுரம், கண்டி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 05 தொழிநுட்ப பூங்காக்களைத் தாபிப்பதற்கு 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அதிவேக பாதை வலையமைப்புக்கு உள்நுழையும் வசதி, சுற்றுலா பயணிகளை கவர்த்தல், தேவையான மனிதவளங்கள் இருத்தல் உட்பட ஏனைய தேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உரிய தொழினுட்ப பூங்காக்களைத் தாபிப்பதற்கு பொருத்தமான இடங்கள் தொழினுட்ப அமைச்சினால் இனங்காணப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டங்களை வர்த்தக ரீதியிலான தொழில் முயற்சிகளாக நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் திறைசேரிச் செயலாளருக்கு மொத்த பங்குகளும் உரித்துடையதாகும் விதத்தில் தொழிநுட்ப பூங்காக்கள் அபிவிருத்தி கம்பனி என்னும் கம்பனியொன்றைத் தாபிப்பதற்கும் எதிர்காலத்தில் இந்த கம்பனியை கொழும்பு பங்குச் சந்தையில் பதிவு செய்து தனியார் முதலீட்டாளர்களுக்கும் உரிய கருத்திட்டத்தில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்பாடு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.