• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெற்றிக்கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு நிதி ரீதியிலான அனுசரணையினை வழங்குதல்
- 2020 டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் F46 பிரிவின் கீழ் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெல்வதில் திரு.தினேஷ் பிரியந்த ஹேரத்தும் F64 பிரிவின் கீழ் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வெல்வதில் சமித துலான் கொடிதுவக்கும் வெற்றிகண்டுள்ளதோடு, அதன் மூலம் அவர்கள் தாய் நாட்டிற்கு விசேடமான வெற்றியினை பெற்றுத் தந்துள்ளனர். 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக தாபிக்கப்பட்டுள்ள தேசிய விளையாட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சருவதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு நிதி ரீதியிலான பரிசுகளை வழங்குவதற்கான தகவு திறன்களும் வழங்கப்படவேண்டிய பரிசுத் தொகையும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. அதற்கிணங்க, மேற்குறிப்பிட்ட வெற்றிகளை ஈட்டித்தந்த விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் அவர்களுடைய பயிற்சியாளர்கள் இருவருக்கும் தேசிய விளையாட்டு சபையின் சிபாரிசின் பிரகாரம நிதி ரீதியிலான பரிசுகளை வழங்கும் பொருட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.