2021-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆட்கொல்லி நிலக் கண்ணிவெடிகளை தடைசெய்யும் சட்டமூலம் - 1997 செப்ரெம்பர் மாதம் 18 ஆம் திகதி ஒஸ்லோ நகரத்தில் நடாத்தப்பட்ட ஆட்கொல்லி நிலக் கண்ணிவெடிகளை சருவதேச ரீதியில் தடை செய்வது தொடர்பிலான இராஜதந்திர மாநாட்டில் ஆட்கொல்லி நிலக் கண்ணிவெடிகளின் பாவனை, நிலக் கண்ணிவெடிகளை திரட்டுதல், உற்பத்தி செய்தல் மற்றும் கையளித்தல் என்பவற்றை தடைசெய்தல் மற்றும் அவற்றை அழித்தல் சமவாயம் தொடர்பில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2017 திசெம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று இலங்கை இந்த சமவாயத்திற்கு உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, அதன் பொருட்டு உரிய சட்டங்களை ஆக்குவதற்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது. இதன் சார்பில் சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |