• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொவிட் - 19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சுதேச மருந்துகளை மக்களுக்கு வழங்கும் கருத்திட்டம்
- நாட்டில் நிலவும் கொவிட் - 19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டிலுள்ள சகல குடும்பங்களையும் தழுவும் விதத்தில் உள்நாட்டு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் மருந்து மற்றும் மருந்து ரீதியிலான நோய் எதிர்ப்பு சக்தி கஞ்சி போன்றவற்றை வழங்கும் பொருட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஆயுள்வேத திணைக்களத்தின் சூத்திர குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருந்து பொதியொன்றை நாட்டிலுள்ள சகல குடும்பங்களுக்கும் வழங்குவதற்கும் உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் முடக்கல் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வருமானம் இழந்த 25 இலட்சம் குடும்பங்கள் சார்பிலும் இரண்டாம் கட்டத்தில் மீதி சகல குடும்பங்கள் சார்பிலும் நடைமுறைப்படுத்தும் பொருட்டும் சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.