2021-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அக்ரஹாரா காப்புறுதித் திட்டத்தின் கீழ் நலன்களை மேலும் விரிவுபடுத்துதல் - 2016 சனவரி மாதம் 01 ஆம் திகதியன்றின் பின்னர் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களுடைய 70 வயது வரை நடைமுறையிலுள்ள அக்ரஹாரா காப்புறுதித் திட்டத்தின் கீழ் நலன்களை வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறித்த திகதியன்றுக்கு முன்னர் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் உரிய நலன்களை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் அக்ரஹாரா காப்புறுதித் திட்டத்தை திருத்துவதற்கு 2020 யூலை மாதம் 22 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, தற்போது நடைமுறையிலுள்ள நலன்களை மேலும் விரிவுபடுத்தி அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்ற சகல உத்தியோகத்தர்களுக்கும் ஏற்புடையதாகும் விதத்தில் அக்ரஹாரா காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |