• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருதரப்பு சமூக பாதுகாப்பு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்காக 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்துதல்
- இந்தியாவில் சேவை புரியும் இலங்கையர்கள் இந்தியாவின் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் தேவையிலிருந்து விடுவிப்பதனையும் இலங்கையில் சேவையாற்றும் இந்தியர்கள் இந்நாட்டு ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் தேவையிலிருந்து விடுவிப்பதனையும் நோக்காகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு சமூக பாதுகாப்பு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு இயலுமாகும் வகையில் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தும் பொருட்டு 2018‑12‑27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.