2021-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
COVID - 19 தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக தற்காலிகமாக நாடு முடக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 2,000/- ரூபா கொடுப்பனவினை வழங்குதல் - COVID - 19 தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக தற்காலிகமாக நாடு முடக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆயினும் அரசாங்கத்தின் எந்த விதமான கொடுப்பனவுகளும் கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு 2,000/- ரூபா கொடுப்பனவினை வழங்குவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தேவையான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படுவதோடு, உரிய கொடுப்பனவுகள் பிரதேச செயலாளர்களினால் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்படும். இதற்குத் தேவையான வழிகாட்டல்கள் பொருளாதார புத்துயிரூட்டல், வறுமை ஒழிப்பு பற்றிய சனாதிபதி செயலணியினால் வௌியிடப்படும். இதற்கிணங்க இந்தக் கொடுப்பனவினை வழங்குவதற்காக மாவட்ட செயலாளர்களுக்குத் தேவையான மேலதிக நிதி ஏற்பாட்டினை விடுவிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |