2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அனைத்தும் உள்ளடக்கிய இணைப்பு மற்றும் அபிவிருத்தி கருத்திட்டம் - நாட்டில் பயணிகள் போக்குவரத்து சுமார் 95 வீதமும் பொருட்கள் போக்குவரத்து சுமார் 98 வீதமும் வீதிகளின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆதலால், தடையற்ற வீதி போக்குவரத்து முறைமையொன்று இருப்பது கிராமிய பிரதேசங்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கிய காரணியாகும். பாதுகாப்பானதும் வினைத்திறன் மிக்கதும் காலநிலைக்கு ஏற்றதுமான வீதி இணைப்புகளை வழங்குவதன் மற்றும் கருத்திட்ட சமூகத்தை பலப்படுத்துவதன் சார்பில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் கமத்தொழில் விநியோகங்களை பலப்படுத்தும் நோக்கில் உலக வங்கியின் நிதி உதவியின் மீது "அனைத்தும் உள்ளடக்கிய இணைப்பு அபிவிருத்தி கருத்திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை "பாதுகாப்பானதும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றதுமான போக்குவரத்து இணைப்புகளை விருத்தி செய்தல்" மற்றும் "விநியோக மற்றும் விவசாயிகளுக்கு சேவை வழங்குவதற்கான அணுகுகையை விருத்தி செய்தல்" என்னும் இரண்டு ஆக்கக்கூறுகளின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை கமத்தொழில் அமைச்சுடன் இணைந்து நடைமுறைப்படுத்து வதற்கும் இதன் பொருட்டு பொருத்தமான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்குமாக நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |