2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மோசடிகளை தடுக்கும் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம் - மரணசாசன கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு 2021 யூலை மாதம் 19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன்போது நொத்தாரிஸ் ஒருவரின் முன்னிலையில் அல்லாது இருப்பினும் ஐந்து (05) சாட்சியாளர்களின் முன்னிலையில் மாத்திரம் எழுதி கைச்சாத்திடப்படும் மரணசாசனத்தை கைச்சாத்திடும் போது நிகழும் மோசடிகளை தடுப்பது இந்த திருத்தங்களின் நோக்கமாகும். ஆயினும் (05) சாட்சியாளர்களின் முன்னிலையில் மரணசாசனமொன்றை எழுதி கைச்சாத்திடுவதற்கு மோசடிகளை தடுக்கும் கட்டளைச் சட்டத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையினால் இந்த கட்டளைச் சட்டத்திலுள்ள குறித்த ஏற்பாடுகளும் திருத்தப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச திருத்தங்களை உள்ளடக்கி மோசடிகளை தடுக்கும் கட்டளைச் சட்டத்தை திருத்தும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |