• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துபொருள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
- 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துபொருள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டத்தை தற்கால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் திருத்துவதற்கு 2019 மார்ச் மாதம் 12 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துபொருள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை யின் பணிகளை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் நிறைவேற்றுவதற்காக இந்த சட்டத்தை மேலும் பலப்படுத்த வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டு மேலும் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கும் இனங்காணப்படும் குறித்த திருத்தங்களை உள்ளடக்கி 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துபொருள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டத்தை திருத்துவதற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.