2021-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களினதும் விளையாட்டு கட்டடத் தொகுதிகளினதும் மேம்படுத்துதல், கையாள்தல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் என்பவற்றை ஒழுங்குறுத்துதல் - நாடு முழுவதிலுமுள்ள விளையாட்டு கட்டடத் தொகுதிகள் மற்றும் மைதானங்கள் பெரும்பாலானவற்றின் பராமரிப்பு பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாததன் காரணமாக அதனை பயன்படுத்தும் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு எதிர்பார்க்கும் பயிற்சியினைப் பெற்றுக் கொள்ள முடியாமற் போகின்றமை தெரியவந்துள்ளது. விளையாட்டுத்துறையில் எதிர்பார்த்த நோக்கங்களை வெற்றி கொள்வதற்கு முக்கிமாக மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் திறமையினை வௌிகாட்டும் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்குத் தேவையான வசதிகளுடனான விளையாட்டு தொகுதிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை நடாத்திச் செல்வது அத்தியாவசியமானதாகும். இதற்கிணங்க தனியார் துறை பங்களிப்பின் கீழ் இத்தகைய விளையாட்டு கட்டடத் தொகுதிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை பராமரித்து பேணுவதற்கு முறையான வழிமுறையொன்றினை அறிமுகப்படுத்தும் பொருட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |