• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க தொழில்முயற்சிகளை பலப்படுத்துவதற்காக சலுகை நிபந்தனைகளின் கீழ் செயற்படு மூலதன கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- COVID - 19 தொற்றுநிலைமை காரணமாக சந்தை பொறிமுறையானது உரிய வகையில் செயற்படாமையினால் தற்போது நடைமுறையிலுள்ள சுமார் 282 முழு அல்லது பகுதி அரசுடமை தொழில்முயற்சிகளின் செயற்பாடுகள் பின்னடைவுக்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக இந்த தொழில்முயற்சிகளுக்கு அன்றாட வர்த்தக நடவடிக்கைகளை நடாத்திச் செல்வதற்குத் தேவையான தொழிற்படு மூலதனங்களை பெற்றுக் கொள்வது கடினமாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில் COVID - 19 தொற்றுநிலைமை நாடு முழுவதும் பரவியமையினால் சிறிய மற்றும் நடுத்தரளவிலான துறைகளுக்குத் தேவையான தொழிற்படு மூலதன தேவைகளை ஈடு செய்வதற்கு அரசாங்கத்தினால் இலங்கை மத்திய வங்கியின் கீழ் அரசாங்க தொழில்முயற்சிகளை பலப்படுத்துவதற்காக சலுகை நிபந்தனைகளின் கீழ் "சுபீட்சம் COVID - 19 மீள் கட்டியெழுப்பும் வசதிகள்" என்னும் சலுகை கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, தற்போது இந்த கடன் திட்டத்தின் கீழ் சுமார் 53,200 தொழில்முயற்சியாளரகளுக்கு அண்ணளவாக 156 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த கடன் திட்டத்தின் கீழ் அரசாங்க தொழில்முயற்சிகளின் தொழிற்படு மூலதன தேவைகளை ஈடு செய்வதற்கு வாய்ப்பு வழங்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.