2021-08-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆரம்ப, இரண்டாம் நிலை, உயர்கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்விக்கான தேசிய ஒலிபரப்பு அலைவரிசையினை ஆரம்பித்தல் - COVID - 19 தொற்றுநிலமை காரணமாக பேணவேண்டிய சமூக இடைவௌியினால் எழுந்துள்ள கல்வி நடவடிக்கைசார் பிரச்சினைகளுக்கு மாற்று வழியாக முழு நாட்டையும் தழுவும் விதத்தில் வானொலி கல்வி அலைவரிசையொன்றை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சும் வெகுசன ஊடக அமைச்சும் இணைந்து திட்டமிட்டுள்ளன. இதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்வதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்பதால் கல்விக்காகவே ஒதுக்கப்பட்ட வானொலி அலைவரிசையொன்றை துரிதமாக ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் தற்போது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்குரிய அலைவரிசைகளிருந்து முழு நாட்டையும் தழுவும் அலைவரிசையொன்றை கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை ஒலிபரப்புவதற்காக பயன்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினாலும் வெகுசன ஊடக அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |