• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-08-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு ஹொரண மில்லாவ பிரதேசத்தில் காணித் துண்டொன்றை குத்தகை அடிப்படையில் வழங்குதல்
- அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஆற்றலை அதிகரிப்பதற்கு கூட்டுத்தாபனத்திலுள்ள இடவசதி போதுமானதாக இல்லாமையினால் ஐந்து (05) உற்பத்தி வசதிகளை தாபித்து அதன் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் பொருட்டு காணித் துண்டொன்றை வழங்குமாறு அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இதற்கிணங்க ஹொரண தொழிநுட்ப அபிவிருத்தி கருத்திட்டமொன்றிற்காக மில்லாவ பிரதேசத்தில் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள 732 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியிலிருந்து ஏக்கர் 65 பேர்ச்சர்ஸ் 17.66 விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை இதன் பொருட்டு ஒதுக்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ சபையின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த உடன்பாட்டின் பிரகாரம் உரிய காணித் துண்டை நீண்டகால குத்தகை அடிப்படையில் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.