2021-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சட்டப் பயிற்சி கல்வி நிறுவனமொன்றைத் தாபித்தல் - நீதிபதிகளின் நிறுவனம் இலங்கையில் சட்டத்துறைசார்ந்த ஒரே கல்வி நிறுவனமாவதோடு, இதன் ஊடாக நீதிபதிகளுக்கு போதுமான பயிற்சியினைப் பெற்றுக் கொள்வதற்கு அத்துடன் ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்கு கிடைக்கும் பங்களிப்பு தொடர்பில் திருப்தியடைய முடியாது. உலகின் பெரும்பாலான நாடுகளில் நீதிபதிகளுக்குத் தேவையான கல்வியினை வழங்குவதற்கும் பயிற்சியின் பொருட்டும் பலைக்கழகங்களுக்குச் சமமான வசதிகளுடன் கூடிய நிறுவனங்கள் தாபிக்கப்பட்டு நடாத்திச் செல்லப்படுகின்றது. நீதி முறைமையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, சட்ட மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய துறைகளின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. அதே போன்று நீதிமன்ற நீதியரசர்களின் அறிவு மற்றும் ஆற்றல் மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்யும் தேவையும் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கையில் சட்டப் பயிற்சி கல்வி நிறுவனமொன்றைத் தாபிப்பதற்கான சிபாரிசினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு உயர் நீதிமன்ற நீதியரசர் (திரு) புவனெக்க அளுவிகாரே அவர்கள் தலைமையில் துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |