• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர் சுற்றுலா விடுதிகள் மற்றும் நீர் பங்களாக்கள் சார்பில் அங்கீகாரம் பெற்றுக் கொள்தல்
- உலகளாவிய சுற்றுலாத் தொழிலில் உயர் மட்ட சருவதேச உல்லாசப் பயணிகளை ஈர்ப்பதற்கு சுற்றுலா தொழிலில் ஈடுபடும் சில நாடுகள் நீர் பங்களாக்கள் என்னும் எண்ணக் கருவை அறிமுகப்படுத்தியுள்ளன. கல்பிட்டி மற்றும் ஏனைய கரையோரப் பிரதேசங்களில் சுற்றுலாத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நீர் சுற்றுலா விடுதிகள் மற்றும் நீர் பங்களாக்கள் என்னும் எண்ணக்கருவைப் பயன்படுத்தலாமென தெரியவந்துள்ளது. தீவு விடுதிகள் எண்ணக்கருவை மேம்படுத்தி கல்பிட்டிய பிரதேசத்தில் சுற்றுலாத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக இந்த பிரதேசத்தில் அமைந்துள்ள 12 தீவுகள் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, கல்பிட்டி பிரதேசத்தில் வௌ்ளை I, II மற்றும் III ஆகிய தீவுகளை நீண்டகால குத்தகைக்கு எடுத்து M/s Sun Resort Investment Lanka (Pvt) Ltd., கம்பனியினால் நீர் சுற்றுலா விடுதிகள் மற்றும் நீர் பங்களாக்கள் உடனான 50 சுற்றுலா விடுதிகளைக் கொண்ட சொகுசு சுற்றுலா விடுதியினை நிர்மாணிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.