• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1964 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க நீர் வளங்கள் சபை சட்டத்தை திருத்துதல்
- அளவற்ற விதத்தில் வர்த்தக நோக்கங்களுக்காக நிலக்கீழ் நீர் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தும் மற்றும் நீர் மாசடைதலை தடுக்கும் நோக்கில் இத்தகைய பணிகள் நீர் வளங்கல் சபையின் மேற்பார்வை மற்றும் கட்டுபாட்டின் கீ்ழ் கொண்டு வருவதற்கு 1964 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க நீர் வளங்கள் சபை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக உரிய ஒழுங்குவிதிகள் 2017 மார்ச் மாதம் 16 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இது தொடர்பிலான தவறுகள் மற்றும் அதற்குரிய தண்டனைகளை விதித்தல் என்பன சார்பில் போதுமான ஏற்பாடுகள் நீர் வளங்கள் சட்டத்தில் இல்லாமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த ஒழுங்குவிதிகளின் பிரகாரம் நீர் வளங்கள் சபையின் கீழ் பதிவு செய்யப்படாத சட்டவிரோதமான துளையிடல் இயந்திரங்களை வைத்திருத்தல் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த ஒழுங்குவிதிகளை மீறுதல் தொடர்பில் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுப்பதற்கு போதுமான சட்ட ஏற்பாடுகள் தற்போது நீர் வளங்கள் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. ஆதலால் மேற்குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவும் இந்த சபையானது சேவைகளை வழங்கும் போது முகங்கொடுக்கும் பிற சவால்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை குறித்த இந்த சட்டத்திற்கு அறிமுகப்படுத்தும் பொருட்டு நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.