• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
MV X-press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக நேரிட்டுள்ள சேதங்களுக்கான நட்டஈடு செலுத்தும் பொருட்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு குழுக்களை நியமித்தல்
- MV X-press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக நிகழ்ந்த கடல் பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு செலுத்துவதற்கு இடைக்கால நட்டஈட்டின் முதலாம் பகுதியாக 720 மில்லியன் ரூபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையிலிருந்து கடற்றொழிலாளர்களுக்கு நட்டஈடு செலுத்தும் பொருட்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக கடற்றொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஏனைய உரிய நிறுவனங்களின் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் கடற்றொழில் துறை தவிர ஏனைய பாதிக்கப்பட்ட துறைகளின் உரிய தரப்பினருக்கு நட்டஈடு செலுத்துவதற்கு சிபாரிசுகளைச் செய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஏனைய உரிய அமைச்சுக்களின் செயலாளர்களையும் உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.