• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கொண்டச்சி தோட்டத்தை இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனமும் சிவில் பாதுகாப்பு திணைக்களமும் இணைந்து மீளத் தாபித்தல்
- 1979 ஆம் ஆண்டில் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தினால் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்ட மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவின் கொண்டச்சி கிராமத்தில் சுமார் 6,000 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியில் மரமுந்திரிகை செய்கையினை ஆரம்பித்து நடாத்திச் செல்லப்பட்டதோடு, யுத்த நிலமை காரணமாக இந்த பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் நலிவடைந்துள்ளன. தற்போது இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனமும் சிவில் பாதுகாப்பு திணைக்களமும் இணைந்து இந்த காணியிலிருந்து சுமார் 935 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை பண்ணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் கொண்டச்சி தோட்டடத்தில் மரமுந்திரிகை மீள் செய்கை பண்ணுவதற்காக 125 மில்லியன் ரூபா கொண்ட நிதி ஏற்பாடானது ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஏற்பாட்டினைப் பயன்படுத்தி இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தினால் 1,500 ஏக்கரில் மரமுந்திரிகை கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் ஏற்கனவே செய்கை பண்ணியுள்ள 935 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணிக்கு மேலதிகமாக 500 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை பண்ணுவதற்குத் திட்டமிட்டுள்ளது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கைக்குத் தேவையான கன்றுகளை வழங்குதல், தொழிநுட்ப உதவி, பயிற்சி மற்றும் மேற்பார்வை பணிகள் என்பவற்றை இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தினால் செய்வதற்கும் பயிர்ச் செய்கையின் பராமரிப்பு பணிகளை இந்த திணைக்களத்தினால் மேற்கொள்வதற்கும் இருதரப்பும் உடன்பாடு செய்து கொண்டுள்ளன. இதற்கிணங்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.