2021-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு சந்தையில் விலைகளை நிலைப்படுத்துவதற்காக வரையறுக்கப்பட்ட லங்கா சதொச மற்றும் கூட்டுறவுத் துறை என்பவற்றின் தலையீட்டில் அத்தியாவசிய பொருட்களை வழங்குதல் - COVID - 19 தொற்று நிலைமையின் மத்தியில் உள்நாட்டு சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி பேணும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. தற்போது உள்நாட்டு சந்தையில் முக்கியமாக சிவப்பு பருப்பு மற்றும் வௌ்ளை சீனி என்பன அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழியாக இந்தியாவிலிருந்தும் அவுஸ்திரேலியாவிலிருந்தும் சீனி மற்றும் சிவப்பு பருப்பு என்பவற்றை நேரடியாக கூட்டுறவுத் துறையின் ஊடாக இறக்குமதி செய்து, வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனம் மற்றும் கூட்டுறவு வர்த்தக வலையமைப்பு ஊடாக விற்பனை செய்யும் சாத்தியம் நிலவுகின்றது. இதற்கிணங்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |