• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு கம்பனிகளுக்கு அந்நிய செலாவணியை திரட்டுவதற்கான வசதிகளைச் செய்தல்
- இலங்கையில் உள்நாட்டு கம்பனி களுக்கு அந்நிய செலாவணியை திரட்டுவதனை அதிகரிப்பதற்கு வாய்ப்பினை வழங்கும் நோக்கில் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கம்பனிகளினால் வழங்கப்படும் வௌிநாட்டு நாணயங்களில் பெயர் குறிப்பிடப்பட்ட பங்குகளை கொழும்பு பங்கு சந்தையில் அட்டவணைப்படுத்துவதற்கான பிரேரிப்பொன்று கொழும்பு பங்கு பரிவர்த்தனையினால் முன்வைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் 02 இலக்க அந்நிய செலாவணி ஒழுங்குவிதிக்கு அமைவாக வௌிநாட்டு நாணயத்தில் வழங்கப்படும் படுகடன் அல்லது ஆரம்ப பங்கு விநியோகம் அல்லது பங்கு இலாபம் செலுத்துதல் அல்லது வௌிநாட்டு நிதியினை பகிர்ந்தளிப்பதன் மூலம் கிடைக்கப் பெறும் நிதி, வர்த்தக வௌிநாட்டு நாணயக் கணக்கிற்கு வரவு வைப்பதற்கு இடமளிக்கப்படுவதில்லை. இலங்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட கம்பனிகளின்பால் வௌிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரித்தல், நாட்டிற்கு அந்நிய செலாவணியினை ஈர்த்தல் மற்றும் இதன் பொருட்டு பங்குபற்றுவோர் எண்ணிக்கையை அதிகரித்தல், இலங்கை நாணயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் வௌிநாட்டு நிதியினை சேகரிப்பதற்கு இலங்கை கம்பனிகள் வெளிநாட்டு பங்கு சந்தைக்கு செல்வதற்குப் பதிலாக மாற்று வழிமுறையினை உருவாக்குதல் போன்ற விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கொழும்பு பங்கு பரிமாறலினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த பிரேரிப்பினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு தற்போது வழங்கப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் 02 இலக்க அந்நிய செலாவணி ஒழுங்குவிதியினைத் திருத்தி 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 7(1) ஆம் பிரிவின் கீழ் ஒழுங்குவிதியினை வௌியிடுவதற்கும் இந்த ஒழுங்குவிதியினை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.