• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்தின் சருவதேச அரசிறை முறிகளில் முதலீடு செய்வதற்கு இலங்கையின் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளுக்கு வசதிகளை வழங்குதல்
- உரிமப்பத்திரம் பெற்ற சில வர்த்தக வங்கிகள் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சில கம்பனிகள் இலங்கை அரசாங்கத்தின் சருவதேச அரசிறை முறிகளில் முதலீடு செய்வதற்கு இலங்கைக்கு வௌியே கடன் பெற்றுக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. நாட்டிற்கு பெற்றுக் கொள்ளக்கூடிய நலனை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இலங்கை அரசாங்கத்தின் சருவதேச அரசிறை முறிகளை / இலங்கை அபிவிருத்தி முறிகளை கொள்வனவு செய்வதற்கு உரிமப்பத்திரம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு தேசிய சேமிப்பு வங்கிக்கு மற்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதிசாரா கம்பனிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதிசாரா கம்பனிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 7(1) ஆம் பிரிவின் கீழ் ஒழுங்குவிதிகளை வௌியிடுவதற்கும் இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.